அவர் மேலும் தெரிவிக்கையில், பஷீர்
ஷேகுதாவூத் கட்சிக்குத் தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவை
பெற்றமையானது பிழையான முடிவாகும். அது தொடர்பில் கட்சி கடினமான நடவடிக்கை
எடுக்க வேண்டியுள்ளது.
அவர் ஏற்கனவே கிழக்கு மாகாண சபை தேர்தலின்
போது பிரதியமைச்சுப் பதவியை துறந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பஷீர் எடுத்த
முடிவானது கட்சியை பாதிக்கக் கூடியதாக இருந்தது. அதன்போது நான் கடுமையான
நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் நிதானமாக
நடந்துகொள்ளுமாறு தெரிவித்தனர். கட்சி தலைமை என்ற ரீதியில் நான் மென்மையாக
நடந்து கொண்டேன் .
தமது கட்சியை பாதிக்கும் வகையில்
செயற்படும் போது கட்சியை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டியுள்ளது. அவர்கள் தலைமை என்றால் என்ன என்பதை தேர்தல் காலங்களின் போது
தெரிந்துகொள்வார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
- விடிவெள்ளி
No comments:
Post a Comment