Thursday, March 28

இன பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை யெடுக்க வேண்டும் - வாசுதேவ

Vasudeva Nanayakkaraஇனங்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்திற்கான புத்திஜீவிகளின் உரையாடல் நிகழ்ச்சி தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சில் நேற்று நடைபெற்றது.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும் கருத்து இங்கு யாராலும் முன்வைக்கப்படவில்லை. அனைத்து அமைப்புக்களுக்கும் தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்கின்ற போதிலும் இன குழுவொன்று மற்றொரு இன குழு மீது குரோதம் கொண்டு இன பாகுபாடு ஏற்படும் விதத்தில் செயற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது,’  என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment