இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும்
அநீதிகளைக் கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று
(25.03.2013) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று
பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள்
அனைத்தும் இயங்கவில்லை. ஓரிரு அரச நிறுவனங்களைத் தவிர அரச, தனியார்
அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் டயர்கள் போட்டு
எரிக்கப்பட்டு வீதித் தடைகள் ஏற்படுத்தப்படிருந்தன. இராணுவத்தினர் பின்னர்
வீதித் தடைகளை நீக்கி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக்
காணக்கூடியதாக இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தின்
பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை
சீர்குலைக்க முயற்சிப்போரை சட்டத்திற்கு முன் நிறுத்து! இலங்கை
முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கெடுபிடிகளை உடன் நிறுத்து! முஸ்லிம்களின்
வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே! உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவ் ஹர்த்தால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்
பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ)
மற்றும் உள்ள10ர் அமைப்புக்கள் சிலவும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

No comments:
Post a Comment