சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில்
முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய பங்குபற்றுவர் என்று அறியமுடிகிறது.
அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல்
உலமாவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான
விசேட சந்திபொன்று நாளை செவ்வாய்கிழமை 19.02.2013 இடம்பெறவுள்ளது.
இடம்பெறப்போகும் சந்திப்பில் ஹாலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில்
எழுதுள்ள பிரச்சினைகள் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இந்த சந்திப்பின்
பின்னர் ஜம்இயதுல் உலமா முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை ஹலால்
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த கூட்டமும் நாளை
நடைபெறவிருக்கின்றது.
No comments:
Post a Comment