Friday, February 15

ஹலால் கொண்டு சிங்கள - முஸ்லிம் மக்களிடையே மதபேதத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி- அதாவுத செனவிரத்ன


ஹலால் கொண்டு சிங்கள - முஸ்லிம் மக்களிடையே மதபேதத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிநாட்டில் நிலவும் சமாதானத்தை சீர்குலைக்க சில சக்திகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசிய பேதத்தை ஏற்படுத்த முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள் என மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சிரேஸ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment