13ஆவது
திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண
சபைகளுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு 31ஆவது
முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் 31ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது.
இதன்போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து
அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்
தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என
அரசாங்கத்தை வற்புறுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது என கிழக்கு
மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரத்தினை
அதிகரிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவது என இந்த
மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக மாகாண கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்கள்
உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில்
கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment