அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ள தாவ-து, போதிய பண வசதியும் தேகாரோக்கியமும் உள்ளபோது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் ஆகும். இதற்காக மக்கா நோக்கிப் பயணிக்கும் யாத்திகர்கள் நாற்பது நாட்கள் வரை அங்கு தங்க வேண்டியுள்ளது.
இதற்கென இலங்கைக்கு வெளியே சம்பளமற்ற விடுமுறையில் செல்ல அனுமதி பெற்றுக் கொள்வதில் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சவூதி அரசின் கட்டுப்பாட்டால் ஆண்டு தோறும் விஸாபெற்றுக் கொள்வதில் பல் வேறு சிரமங்களை அனுபவிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டுப் பாட்டால் கிடைக்கும் விஸாவில் பயணிக்க சம்பள மற்ற விடுறை பெற்றுக் கொள்வதில் அதைவிட அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
போதிய பண வசதியுள்ள போது மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரைக்கான வெளிநாட்டுப் பயணத்திற்கு சம்பள மற்ற விடுறை பெற முன்னைய லீவுகளில் போதிய சேமித்த பிணி விடுறை இல்லை என்ற காரணத்தினாலேயே இவர்களது பயண அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.
எந்தவொரு மாகாணத்திலுமில்லாத தாபனக் கோவையை மீறிய கிழக்கு மாகாண ஆளுநரின் இந்தப் பொருத்த மற்ற நடைமுறைகளைத் தளர்த்தக் கோரி ஜனாதிபதிக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் விடுத்த-கோரிக்கைக்கு ஜனாதிபதி மாத்திரம், கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பொருத்தமான நடவடிக்கைக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இற்றைவரை எந்த நடவடிக்கையும் எவராலும் எடுக்கப்படவில்லை. எனவே, புனித ஹஜ் பயணத்திற்கான யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்கும் வகையில் தாபனக் கோவையின் ஙீஐஐ ஆம் அத்தியாயம் 23:1, 23: 2 ஆம் பிவுகளில் திருத்தம் கொண்டுவரும் பிரேர-ணையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், அதனை நிறைவேற்றி அமுல்படுத்த ஆவன செய்யுமாறும் கோருகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment