முஸ்லிம்களுக்கு எதிராக இன்று நாட்டில்
நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் முஸ்லிம்
அமைச்சர்களின் சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே
இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அமைச்சர் பெளஸியின் வீட்டில்
நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சர்களான பெளஸி, ரவூப் ஹக்கீம், ரிஷாத்
பதியூதீன், அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .
அதேவேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஹலால் சான்றிதழ் வழங்கியதில் தவறில்லை. என்பதையும் அமைச்சர்கள் குழு இன்று
அமைச்சர்கள் உப குழு கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளது என
தெரிவிக்கப்படுகிறது . நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மற்றும்
முஸ்லிமல்லாதோருக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தா வண்ணம் நல்லதொரு
முடிவை கௌரவ அமைச்சர் எம்.எச்.எம்.பௌஸிதலைமையில் பாராளுமன்ற முஸ்லிம்
உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுத்தரல் வேண்டும். என அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment