புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய கர்தினல்கள் கூட்டம், வாடிகன் பீட்டர்
தேவாலயத்தின் 16-வது விசேஷ ஆலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் தினமே புதிய
போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் நேற்றைய முதல் நாள் கூட்டம், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யாமல் தோல்வியில் முடிந்தது.
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யப்படவில்லை என்ற அறிவிப்பு, வாடிகன்
தேவாலய புகை போக்கியில் வெளிவந்த கருப்பு புகை மூலம் தெரியவந்தது. புதிய
போப் தேர்வு பெற்றவுடன் அதற்கான அறிவிப்பு தேவாலய புகை போக்கியில் வரும்
வெள்ளை புகையினால் அறிந்துகொள்ளப்படும்.
உலகம் முழுவதிலும் இருந்து 115 கர்தினல்கள் கலந்துகொண்ட இந்த
கூட்டத்திற்கு வாடிகன் கர்தினல்கள் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமை
தாங்கினார்.
ஒரு புதிய போப்பை, தேர்வு செய்ய இந்த 115 கர்தினல்களும் ஒரு நாளைக்கு 4
முறை வாக்களிப்பார்கள். ஒருவர் மீது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
வாக்குகள் கிடைக்கும் வரை இந்த வாக்கெடுப்பு தொடரும். தற்போதுள்ள நிலையில்
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதுயும் நடைமுறை ஒரு சில நாட்கள் நடக்கும்
என்று சொல்லப்படுகிறது.
இந்த தேர்வில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து 5 கர்தினல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment