Sunday, June 23

பொதுபல சேனா வைத்திருக்கும் ஐந்து இரத்தினங்கள்: மஹிந்த, சமல், பசில், கோட்டா ,நாமல் !: அமைச்சர் ராஜித

Dr._Rajitha_Senaratne ‘புனித மூன்று இரத்தினங்களுக்கு’ பதிலாக பொதுபல சேனா இப்போது ஐந்து இரத்தினங்களை வைத்துள்ளது. மஹிந்த, சமல், பசில், கோட்டா  மற்றும் நாமல் ஆகியோரே அந்த ஐந்து இரத்தினங்கள் என  மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்துள்ளார் .(பெளத்த கோட்பாட்டின் படி மூன்று இரத்தினங்கள் என்பது   புத்தா ,தம்மா ,சங்ஹா ஆகியவற்றை குறிக்கும்)
குடவெள்ள என்ற பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர்,
பொது பல சேனா எனது அரசியல் வாழ்கையை முடிப்பது தொடர்பாக   தற்புகழ்ச்சியாக பேசுகிறார்கள் அவர்கள்  T56 மூலம்  எனது  சொந்த வாழ்க்கை முடிவு கட்ட முயற்சித்தாலும் அது அவர்காளால்  முடியாது. அரசியலில் அமைச்சு பதவி என்பது ஒரு போனஸ் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment