Tuesday, June 18

முஸ்லிம்கள் கலாச்சார உடை அணிவதற்கு இடமளிக்கக் கூடாது - பொதுபல சேனா

gnanasaraமுஸ்லிம்கள் கலாச்சார உடை அணிவதற்கு இடமளிக்கக் கூடாது. குறிப்பாக முஸ்லிம்களின் நிகாப் மற்றும் புர்கா ஆகிய கலாச்சார உடைகளை அணிய அனுமதியளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

இலங்கையில் அரேபிய நாட்டு கலாச்சாரங்கள் தாக்கம் செலுத்துவதன் காரணமாக, அரேபிய நாடாக மாற்றமடைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் பெண்கள் இந்த ஆடைகளை அணிவதனால் சிரமம் ஏற்படுவதாகவும், அவர்கள் முகத்தை மூடிக் கொண்டு வருவதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் காணப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment